• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திமுக அலுவலகத்தை இடித்து, சூறையாடிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்…

BySeenu

Nov 7, 2023

கோவை மாவட்டம் 20வது வார்டு, மணியக்காரன் பாளையம் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, கலைஞர் நூற்றாண்டு நினைவு படிப்பகம் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த நிலையில், இதனை நேற்று மர்மநபர்கள் இடித்து தள்ளியதுடன் அங்கிருந்த 35 அடி உயரமுள்ள கொடிகம்பத்தை திருடி சென்றனர், இது சம்மந்தமாக பாதிக்கபட்ட திமுகவினர் சம்பந்த பட்ட இடத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிகழ்வில் திமுக 20 வது வட்ட அவைத்தலைவர் வெள்ளியங்கிரி, 20 வது வட்ட துணைசெயலாளர் அன்னபூரணி, 20வட்ட பிரதிநிதி பேங்க் ராசு, மற்றும் நிர்வாகிகள் செளந்தர், சன் கார்த்திக், ராஜா, ராஜ மாணிக்கம், குமார், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.