• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இயங்கும் மதுபான கடை – வேறு இடத்திற்க்கு மாற்றக் கோரும் மக்கள்…

Byமதி

Oct 25, 2021

திருவல்லிக்கேணி சென்னை மாநகராட்சியின் மிகவும் பரபரப்பான பகுதியாகும்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் கோயில், மசூதி, சர்ச், பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் ஆகியவைகளுக்கிடையே பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றிலும் முகம் சுளிக்கும் வகையில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடை எண்: 812 செயல்பட்டு வருகிறது. மதுகடை இங்கு செயல்படுவதால் இது பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் இடையூறை ஏற்ப்படுத்துகிறது.

எனவே இப்பகுதி பெண்கள், மாணவ – மாணவிகள், வணிகர்களின் நலன் கருதி இந்த மதுபானக் கடையை வேறு ஒரு இடத்திற்கு மாற்றித் தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.