கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.

இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை முதல் விமான சேவை இயங்கும் ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு..,
- செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
- தேனியில் மூடப்படும் டீக்கடைகள், நேரம் குறைக்கப்படும் உணவகங்கள்..,
- கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகளிரணி நிர்வாகிகள்..,
- மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’!
- திற்பரப்பு அருவிவாகன நுழைவு கட்டணம் பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,
- எஸ்.எம்.எஸ் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம்..,
- பழனியில் நகை கொள்ளை!!
- ஜிடி நாயுடுவின் சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்..,
- திண்டுக்கல் அருகே கணவன் மனைவி தற்கொலை!!



