கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.
இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணல் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை நகர் குழுவின் சார்பாக மே தினவிழா
- பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற முதலாளி…
- கோவை ஈச்சனாரி சாலையில் சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
- மதுரை ஏ ஐ யூ டி சி தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா
- பொதுமக்களின் தாகம் தணித்த க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள்
- பெரம்பலூரில் கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா
- சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், முதுமை தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம்
- அரசு போக்குவரத்தில், மே தினம்
- மதுரை அருகே திமுக சார்பில், இளநீர் பந்தல்