• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் 50 பெண்கள் உட்பட 70 பேர் சாலை மறியல்…

ByKalamegam Viswanathan

Aug 5, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் ஓனேகால் பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்து பொதுமக்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறை புகார் அளித்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இன்று மங்கம்மாள் சாலை மகாலட்சுமி காலனி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 70 பேர் சாலை மறியல் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தகவல் வந்த திருநகர் காவல் சார்பாய்வாளர் குமாரி 94வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்தியன் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் மது சூதனன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதாகவும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக போர்வெல் பகுதியில் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்தல் அளித்த உறுதியின் பேரில், இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.