• Mon. Apr 29th, 2024

மொபைல் வெடித்து மாணவன் பலி!

Byமதி

Oct 20, 2021

தற்போது தமிழகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் மூலம்தான் பெரும்பாலான வகுப்புகள் நடைபெறுகிறது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்த நிலையில்,
வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ காயத்தினால் 11 வயதாகும் 5ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடால் வெடித்துச்சிதறியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *