• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்

ByA.Tamilselvan

Jun 9, 2023

ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வடக்கு & மத்திய ரயில்வே எச்சரித்துள்ளது.
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் அவர்களது கவனம் சிதற வாய்ப்புள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஏற்பட்டுவரும் ரயில் விபத்தை கவனத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரயில் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் செய்யப்பட்ட போன் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.