தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயாவில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் மயில்கண்ணு வரவேற்றார். கண்காட்சியை கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹபிபூர்ரஹ்மான் தொடங்கி வைத்தார்.