• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி பூஜைப்பாறை பெருமாள் கோவில் உற்சவ திருவிழா..!

Byவிஷா

Apr 15, 2023

உசிலம்பட்டி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பூஜைப்பாறை பெருமாள் கோவிலின் உற்சவ திருவிழா – விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி. பெருமாள்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூஜைப்பாறை பெருமாள் கோவில்., இக்கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குனி உற்சவ திருவிழா ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம், பல்வேறு காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெறாமல் இருந்த சூழலில் இந்த ஆண்டு இத் திருவிழா 7 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முதல் துவங்கி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலைகள் எடுப்பு விழாவிற்காக அருகே உள்ள வில்லாணியில் சிலைகள் செய்யப்பட்டு நேற்று வி.பெருமாள்பட்டிக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து இன்று முழுவதும் வி. பெருமாள்பட்டியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று மாலை மேளதாளங்கள் வான வெடி முழங்க ஊர்வலமாக மலை அடிவாரத்தில் உள்ள பூஜைப்பாறை பெருமாள் கோவிலுக்கு கருப்பசாமி, கன்னிமார் சிலைகள் எடுத்து செல்லும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி சிலைகளுக்கு புனித நீர் தெளித்து, மாலை மரியாதை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பூஜைப்பாறை பெருமாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும் சாமி சிலைகளுக்கு நாளை அதிகாலை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.