தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உருவெடுத்துள்ளது, உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததன் மூலம் இப்பகுதி இன்று முக்கிய உற்பத்தி மையமாக திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024–25ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சியாகக் குறிப்பிடப்படுகிறது.
சிறந்த கல்வி, தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாட்டால் தமிழ்நாடு திறமையான மனித வளத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டும் வலுவாக வளர்ந்து வருகின்றன.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்ரீபெரும்புதூர் திகழ்கிறது. ஒருகாலத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இந்தப் பகுதி, 1990களில் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வந்ததன் மூலம் தொழில்துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது.
பின்னர் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆலையை தொடங்கியதன் மூலம் இப்பகுதி எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறியது. இன்று சாம்சங், பாக்ஸ்கான், ப்ளெக்ஸ், டெல் உள்ளிட்ட பல உலகளாவிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வீட்டு உபயோக மின்னணு சாதனங்களுக்கான உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் இங்கு இயங்கி வருகின்றன. இதன் மூலம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
தொழில்துறை வளர்ச்சியால் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. முன்பு வேலைக்காக வெளியூருக்கு சென்ற இளைஞர்கள், இன்று தங்கள் ஊரிலேயே நிலையான வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். போக்குவரத்து, வீடமைப்பு, வணிகம் மற்றும் சேவைத் துறைகளும் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளன.
இவ்வாறு தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் மூலம் ஸ்ரீபெரும்புதூர், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 150 பில்லியன் டாலர் மதிப்பிலான எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாகவும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் மாறும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
தொழில்துறை முதலீடுகள் உள்ளூர் மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்ரீபெரும்புதூர் திகழ்கிறது.
இதுகுறித்து மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஷைலேஷ் கண்ணா கூறுகையில்,
சாம்சங் போன்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான முதலீடுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் பணியாளர்களின் திறன்கள் மேம்பட்டு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
தொழில்துறை வளர்ச்சியால் முன்பு வேலைக்காக வெளியூருக்கு சென்ற இளைஞர்கள், தற்போது தங்கள் ஊர்களுக்கு அருகிலேயே பாதுகாப்பான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். அதே நேரத்தில் போக்குவரத்து, வீடமைப்பு, சில்லறை வணிகம் மற்றும் சேவைத் துறைகளும் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளன.
நிபுணர்கள் கூறுவதாவது, ஹூண்டாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் சிறந்த ஊதியம் மற்றும் தொழிலாளர் நலனுக்கான புதிய அளவுகோல்களை உருவாக்கியுள்ளன.
முப்பது ஆண்டுகளாக தொடரும் தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக, அப்பகுதியில் மக்களின் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறியுள்ளதுடன், கல்வியறிவு மற்றும் சேமிப்புத் திறனும் அதிகரித்துள்ளது.
2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 150 பில்லியன் டாலர் மதிப்பிலான எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறும் இலக்குடன் முன்னேறி வருகிறது.
இந்த வளர்ச்சி, தொழில்துறை முதலீடுகள் உள்ளூர் மக்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்ரீபெரும்புதூர் திகழ்கிறது.




