• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

காதலி தன்னிடம் பேசாததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

ByA.Tamilselvan

Feb 3, 2023

தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் சிங்கப்பூரை சேர்ந்த காஷிங்கன் என்ற நபர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
காதலி தன்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை மற்றும் காதலியை துன்புறுத்துவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்திருப்போம். ஆனால் சிங்கபூரை சேர்ந்த இந்த நபர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது காதலி தன்னிடம் பேசாததால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு பணம் செலவழித்ததுள்ளார். அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈடாக ரூ.24 கோடி தரவேண்டும், இல்லையெனில் தன்னை காதலிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்