சிதம்பரம் அருள் மிகு இளமையாக்கினார் கோயில் சிலைகள் திருடுபோவதாக அபிராமி அடியார் வீடியோ வெளியிட்டு புகார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த கோயில் அருள்மிகு இளமையாக்கினார் கோயில் சிலைகள் காணமல் போவதாகவும், கோயிலில் பல பகுதிகள் காரணமின்றி இடித்து சிலைகள் திருடப்படுவதாகவும் உலக சிவனாடியார் அபிராமி அடியார் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சிலைகளை இடிக்கும் அதிகாரம் யார் கொடுத்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிலைகளை எங்கே என கேள்வி எழுப்பி அதனை திரும்ப கோயிலில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.