சிந்தனைத்துளிகள்
ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக
உழைக்கும் போது மனிதனாகிறான்
ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போது
அவன் உண்மையான மனிதனாகிறான்.
மாற்றம் என்பது மானுட தத்துவம்
மாறாது என்ற சொல்லை தவிர
மற்றவை அனைத்தும் மாறிவிடும்.
அன்பு நிறைந்த பெண்ணிடம்
காதல் கொள்வது என்பது
ஒரு மனிதனை மறுபடியும்
மனிதனாக்குகிறது.
பிறக்கும் குழந்தைகள்
அனைத்தும் உண்ணும்
வயிற்றுடன் மட்டும் பிறக்கவில்லை..
உழைக்கும் இரண்டு
கைகளுடனும் தான் பிறக்கின்றன.
மக்களை மகிழ்ச்சி அடைய
செய்யும் மனிதன் தான்
மகிழ்ச்சிகரமான மனிதன் என்று
வரலாறு வரவேற்கிறது.