• Fri. May 3rd, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 27, 2023

சிந்தனைத்துளிகள்

ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக
உழைக்கும் போது மனிதனாகிறான்
ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போது
அவன் உண்மையான மனிதனாகிறான்.

மாற்றம் என்பது மானுட தத்துவம்
மாறாது என்ற சொல்லை தவிர
மற்றவை அனைத்தும் மாறிவிடும்.

அன்பு நிறைந்த பெண்ணிடம்
காதல் கொள்வது என்பது
ஒரு மனிதனை மறுபடியும்
மனிதனாக்குகிறது.

பிறக்கும் குழந்தைகள்
அனைத்தும் உண்ணும்
வயிற்றுடன் மட்டும் பிறக்கவில்லை..
உழைக்கும் இரண்டு
கைகளுடனும் தான் பிறக்கின்றன.

மக்களை மகிழ்ச்சி அடைய
செய்யும் மனிதன் தான்
மகிழ்ச்சிகரமான மனிதன் என்று
வரலாறு வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *