• Tue. Apr 30th, 2024

9 செயற்கைக்கோள்களுடன்
பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்
26-ந்தேதி விண்ணில் பாய்கிறது

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 26-ந் தேதி விண்ணில் சீறிப்பாய்கிறது.
விக்ரம் வரிசையில் விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற புத்தொழில் நிறுவனம் (ஸ்டார்ட்-அப்) வடிவமைத்திருந்தது.
இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட் ஓசன்சாட்03 என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும். அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா விண்வெளி நிறுவனத்தின் தைபோல்ட் 1 மற்றும் தைபோல்ட் 2 என்னும் 2 செயற்கைக்கோள்கள், ஐ.என்.எஸ். பூட்டான் சாட், பிக்ஸெல் நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைக்கோள் ஆகியவை 8 நானோ செயற்கைக்கோள்கள் ஆகும். 26-ந் தேதி விண்ணில் பாய்கிறது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணியாகும். இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் என்று அழைக்கப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள்,
25-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *