• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அரசு பஸ்ஸில் பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்ட MLA

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் AG.வெங்கடாசலம் MLA பர்கூர் மலைப்பகுதியில் நலத்திட்டம் கொடுக்கும் விழாவில் கலந்து கொள்ள பஸ்ஸில் பயணம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் பர்கூர் தாமரை கரையில் கனரா வங்கியின் கிளையை திறந்து வைத்தார். அதன் பின் ஊராட்சி கிழக்கு மலைப் பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பர்கூர் பகுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்தியூரில் இருந்து 25 கிலோ மீட்டர் அரசு பேருந்தில் பயணம் செய்து மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.