சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மானாமதுரை யில் இருந்து சிவகங்கைக்கு வந்த கோவில் கட்டுமான வேலை பார்க்கும் சிற்பி செந்தில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கொண்டு வந்த ரூபாய் 83000 பணத்திற்கு உரிய முறையில் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து நிலையான கண்காணிப்பு குழு துணை வட்டாட்சியர் சங்கர் தலைமையிலான பறக்கும் படை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.