• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

உலகச் சாதனை நிகழ்ச்சி 700 மாணவர்கள் பங்கேற்பு..,

கன்னியாகுமரியில் நடைபெற்ற உலகச் சாதனை நிகழ்வு நிறைவு பெற்றது. பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலைத்துறைகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஆஸ்கர் ரிகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க தகுதியான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு கலை மற்றும் கலாசார கவுன்சில் மேற்பார்வையில், இந்திய கலாசார அமைச்சக அங்கீகாரத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, கன்னியாகுமரி பெரியார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச் கலையரங்கில் நேற்று தொடங்கி உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

நீதிபதிகள் குழு:
இந்த தேசிய மட்டத்தில் நிகழ்வை மதிப்பீடு செய்வதற்காக, இந்திய கலை மற்றும் கலாசார சம்மேளன தேசிய தலைவர் டாக்டர் அரவிந்த் லட்சுமிநாராயணன், ஆஸ்கர் புக்ஸ் ஆஃப் ரிகார்ட்ஸ் தேசிய தீர்ப்பாயர் டாக்டர் லாவண்யா ஜெயக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்:
உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் நிறுவனர் டாக்டர் எஸ். சுதாகரன், ஜோசப் கலசான்ஸ் பள்ளி முதல்வர் பிதா ஜின்ஸ் ஜோசப், கிறிஸ்து சென்ட்ரல் பள்ளி தொடர்பாளர் பிதா டினு கொட்டக்கபரம்பில், சேக்ரட் ஹார்ட் பள்ளி முதல்வர் புஷ்பலதா, பெத்தானியா மேட்ரிக் பள்ளி முதல்வர் தார்சிதா, விவேகானந்த கேந்திர வித்யாலயா முதல்வர் கே.ஜி. சாரிகா, கன்னியாகுமரி பப்ளிக் ஸ்கூல் முதல்வர் கருணா டேவிட் உட்பட பல கல்வி மற்றும் கலாசாரத் துறை தலைவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அதேபோல் நாகர்கோவில் ரொட்டரி தலைவர் முகம்மது ரிஸ்வான், தொழில் முனைவோர் உமாமகேஷ்வரன், அனஸ் முபாரக், நிஷா அனஸ் உள்ளிட்ட ரொட்டரி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி பற்றி:
நிகழ்வை ஒருங்கிணைத்த கே.கே.ஆர் அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குனர் ஹன்ஷி எச். ராஜ், “இளம் தலைமுறையின் கலைத்திறன், தற்காப்புத் திறன், மன உறுதி, ஒழுங்கு ஆகியவற்றை மேம்படுத்தும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. மாணவர்களின் அர்ப்பணிப்பும் பெற்றோரின் ஊக்கமும் இந்த சாதனையை சாத்தியமாக்கியது” என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, உலகச் சாதனைப் புத்தகத்தில் பதிவு பெறும் வகையில் முக்கிய நிகழ்வாக நிறைவு பெற்று உள்ளூர் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.