சமூக வலைதளங்கள் மூலம் அதிகமான குற்றங்கள் நடந்தேறி வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் எமோஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால் அந்த நபருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் (இந்திய மதிப்பில் 20 முதல் 60 லட்சம் ரூபாய்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது!
மேலும், அனுமதியின்றி உரையாடல் தொடங்கினாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்பியவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.