தமிழ்திரையுலகில் பல சிறப்புகளைப் பெற்ற படம் மூன்றாம் பிறை.. கமல், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.. கண்ணதாசனின் கடைசி கவித்துவமான வரிகளால் எழுதப்பட்ட பாடல் வெளியான படம், கமலுக்கும், பாலுமகேந்திராவுக்கும் விருது பெற்றுத்தந்த படம் என பல சிறப்புகளைக் கொண்ட படம் மூன்றாம் பிறை வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சினிமாவில் கவித்துவத்தை, கலையை விரும்பியவர்களுக்கு பாலுமகேந்திரா பெயர் போனவர். தேசியவிருதுகளின் நாயகன் பாலுமகேந்திரா எடுத்தபடம் மூன்றாம் பிறை அதில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி வழக்கமான காதல், இளமையைத்தாண்டி வேறுகோணத்தில் நடித்தனர். இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம், பல பாடல்களை பல கவிஞர்கள் எழுதினாலும் கண்ணதாசனின் வைர வரிகளுக்கு எப்போதும் மவுசு உண்டு.
அப்படி எழுதிய பாடல்தான்
“கண்ணே கலைமானே!
கன்னி மயிலென கண்டே உனை நானே’ பாடல்.
அதை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும்முன் எழுதிக்கொடுத்துவிட்டு இதுதான் கடைசி பாடல்னு நினைக்கிறேன் என்று கூறிச் சென்ற கவிஞர் அதன்பின் உயிரற்ற உடலாகத்தான் கொண்டுவரப்பட்டார். அதனால் அப்பாடல் எப்போதும் சிறப்புப்பெற்ற பாடலாக விளங்கியது. இதை அடிக்கடி இளையராஜாவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பள்ளியின் டீச்சராக அப்பாவி இளைஞராக வரும் கமலிடம் விபத்தில் சிக்கி தான் யார் என்பதை மறந்துப்போன குழந்தையாக பாதுகாப்பு தேடிவரும் ஸ்ரீதேவிக்கு அடைக்கலம் கொடுக்கும் கமல். ஒருகட்டத்தில் ஸ்ரீதேவி மீது அபரிதமான அன்பும், காதலும் கொள்கிறார். ஸ்ரீதேவி நலமடைந்த பின்னர், அவருக்கு கமல் யார் என்பது மறந்துப்போக ஊருக்கு புறப்படும் ஸ்ரீதேவியிடம் கமல் தான் யார் என்பதை ஞாபகப்படுத்த எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிய விபத்தில் சிக்குகிறார் என்பதாக கதை முடியும். யதார்த்தம் இல்லை என்றாலும் அந்த கடைசி காட்சி , அதில் கமலின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது.
இந்தப்படத்துக்காக ஸ்ரீதேவி, கமல் இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, சுப்பிரமணி என நாயை குழந்தைத்தனமாக கொஞ்சும் ஸ்ரீதேவி, காதல், தந்தையின் அன்பு என சகலத்தையும் கலந்து ஸ்ரீதேவியின்மீது பொழியும் வேடத்தில் நடித்த கமல், இயற்கையை அள்ளிக் கொடுத்த பாலுமகேந்திராவின் கேமரா என பலதும் பாராட்டப்பட்டாலும் கமலுக்கும், பாலு மகேந்திராவுக்கும் விருது கிடைத்தது.
இப்படம் இந்தியில் சாத்மா என எடுக்கப்பட்டது, அதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்த ஸ்ரீதேவியை பாலிவுட் வாரி அணைத்துக்கொண்டது. பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக மாறிய ஸ்ரீதேவி போனிகபூரை மணந்து அங்கேயே செட்டில் ஆனார்.
கண்ணே கலைமானே, பூங்காற்று புதிரானது, பொன்மேனி உருகுதே, நரிகதை பாடல் அனைத்தும் சிறப்பாக ரசிக்கப்பட்டது. 40 ஆண்டுகள் கடந்தும் கண்ணே கலைமானே எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுத்தான் இருக்கிறது. அந்த வகையில் மூன்றாம் பிறை எப்போது ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு படம் தான்.

- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]