மஞ்சூர் அண்ணாமலை சுவாமி திருக்கோயில் காவடித்திருவிழா நாளை துவங்குகிறது. பக்த கோடிகள் கலந்து கொள்ளுமாறு அண்ணாமலை ஆசிரம ஸ்தாபகர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்
அண்ணாமலை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் காவடி திருவிழா நாளை நடைபெறுவதால் வெளிநாடு வெளி மாநிலம் வெளியூரிலிருந்து வருகை புரிபவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் உதகை குன்னூர் கோத்தகிரி மற்றும் கோவை காரமடையில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவடி திருவிழாவிற்கு தொடர்ந்து காலை முதல் இரவு வரை அன்னதானம் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு 46 ஆம் ஆண்டு நிறைவு விழா பஞ்சலோக உற்சவ மூர்த்தி பவனி விழா. 34 ஆம் ஆண்டு காவடி திருவிழா , முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளன. பக்த கோடிகள் கலந்து கொள்ளுமாறு அண்ணாமலை ஆசிரம ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்த சுவாமிஜி அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்