அஜித்தின் வலிமை படம் ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடிக்கும் மேலாக வியாபாரம் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை! போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன! மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ள முதல் அஜித் படம் வலிமை தான். அதே போல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் அஜித் படமும் இது தான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றது.
லேட்டஸ்ட் தகவலாக, அஜித்தின் வலிமை படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் ரூ.300 கோடியை தாண்டி விட்டதாம். வலிமையின் மொத்த பட்ஜெட்டே ரூ.150 கோடி தான். ஆனால் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே இருமடங்கு லாபத்தை எடுத்து விட்டார்கள். ரிலீசுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. இந்த சமயத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் டிக்கெட் வசூல், வெளிநாட்டு வசூல் என பல விஷயங்கள் உள்ளது. இது எத்தனை கோடிகளை தாண்டுமோ என அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக 90 சதவீதம் தியேட்டர்களில் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழக தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு தியேட்டர்களில் ரிலீசாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் வலிமை தான். அதுவும் மிக அதிகமான தியேட்டர்களில் வலிமை படம் ரிலீசாக உள்ளதால் இதுவரை முடங்கி கிடந்த தியேட்டர் வியாபாரங்கள் மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன் தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் காத்திருக்கிறார்கள்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]