• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆற்றில் அடித்த செல்லப்பட்ட 3 பெண்கள் பலி-திமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஆனைகட்டி ஆணிக்கல் மாரியம்மன் கோவில் கார்த்திகை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஊட்டி அருகே உள்ள கடநாடு,எப்பநாடு,சின்னகுன்னூர் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்ப்படோர் சென்றனர்.அப்போது தரை பாலத்தை கடக்கும்போது ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளபெறுக்கு ஏற்ப்பட்டதால் கோவிலுக்கு சென்ற சுசீலா(56) விமலா(35) வாசுகி(45) சரோஜா(65) ஆகிய நான்கு பெண்கள் ஆற்றில் அடித்துசெல்ப்பட்டனர்

. அவர்ககளை தேடும் பணி நடைபெற்றது. இரவு வேளை என்பதால் மீட்ப்பு பணி தோல்வியை கண்டது. தகவலறிந்த மசினகுடி காவல்துறையினர் மற்றும் தீயனைப்பு துறை மற்றும் வனத்துறையினர் இன்று மூவரின் சடலத்தை மீட்டனர் சுசீலாவை தேடிவருகின்றனர்.

வெள்ளத்தில் அடித்துச்சென்று பலியான சாரோஜா,(65) வாசுகி(45) விமலா(35) சுசீலா(56) ஆகியோர் குடும்பத்தினர்களுக்கு நீலகிரி திமுக மாவட்ட செயலாளர் பா,மு,முபாரக் அரசு மருத்துவனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.