• Sun. May 5th, 2024

தேசிய அளவிலான 2-வது சிலம்பாட்ட போட்டி

Byஜெ.துரை

Feb 15, 2024

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி
அரங்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ்,குஜராத், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அநேக மாவட்டத்தில் இருந்தும் சுமார் 1500 மாணவர்கள் உட்பட இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியானது வயது அடிப்படையின் பிரிவில் தனித்தனியே தனித் திறமை போட்டியாக நடைபெற்றது.

இதில் ஒற்றை கொம்பு, இரட்டைக் கொம்பு, வேல்கம்பு ,செடி குச்சி,சுருள்வால் போன்ற சிலம்ப கலையும் இதில் இடம் பெற்றன.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கண்ணன் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *