• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீடு..,நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை..!

Byவிஷா

May 22, 2023

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் விதமாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் 653 சிறுபான்மையற்ற தனியார் சுயநீதி பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.