பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்; கிலோமீட்டருக்கு 3 – 5 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் வெயில், மழை என்று பாராமல் வேலை செய்தும் எந்த பலனும் இல்லை என ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனம் போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர்
ஸ்விக்கி (Swiggy) ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கிட வேண்டும்,அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பழைய ஊதிய முறை தொடர வேண்டும், சீனியர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் வழங்கிட வேண்டும், ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாயும் , ஒரு ஆர்டருக்கு குறைந்த பட்டசம் 30 ரூபாயும் வழங்கிட வேண்டும், அதோடு பேட்ச் ஆர்டருக்கு 20 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது,
அப்போது பேசிய அவர்கள்,
இன்றிலிருந்து ஸ்விக்கி நிறுவனத்திற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம், இந்த வேலையை நிறுத்தத்தில் ஈடுபடும் சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மார்ச் மாதமே ஸ்விக்கி நிறுவனத்திற்கு கோரிக்கை மனுவை அனுப்பி இருந்தோம் ஆனால் அதன் மீது ஸ்விக்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கடந்த 4 ஆம் தேதி ஸ்விக்கி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்தோம் அதோடு தொழிலாளர் நல ஆணையரிடமும் இது தொடர்பாக வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளோம்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனம் போலீசாரை வைத்து மிரட்டுகிறது தற்பொழுது கூட பெரம்பூர் பகுதியில் செல்வம் என்னும் ஊழியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி உள்ளனர்.
ஸ்விக்கி நிறுவனத்தின் தொடக்க காலத்தில் ஊழியர்களுக்கு கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாய் வழங்கப்பட்டது, தற்பொழுது பெட்ரோல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது இப்பொழுதும் அதே ஐந்து ரூபாய் வழங்கி வருவதால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தற்பொழுது கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்
கொத்தடிமைகளை போல நாங்கள் வேலை செய்து வருகிறோம், கொரோனா காலகட்டம் வெயில், மழை என்று பாராமல் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை செய்து வருகிறோம் எனவே பொதுமக்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
மாநிலம் முழுவதும் 10,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஸ்விக்கி நிறுவனம் எங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறினர்.
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]