• Thu. Apr 25th, 2024

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு…

Byகாயத்ரி

Sep 12, 2022

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு தினத்தை அமெரிக்க மக்கள் இன்று அனுசரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா ஒருபோதும் இந்த தாக்குதலை மறக்காது என்று 21வது நினைவு தினத்தில் நாட்டு மக்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். இந்த கோர சம்பவத்தில் 21வது ஆண்டு நினைவு தினம் நேற்று பெண்டகனில் அனுசரிக்கப்பட்டது. இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *