கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று(மே_23) இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நாகர்கோவில் அடுத்த ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கல்விளாகம் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 1800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்.

அதேபோன்று அந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 7000 வாழை மரங்கள் சாய்ந்து உள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பில் உள்ளனர். விவசாயிகள் வேதனை தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.