

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், மார்ச் 1-ம் தேதியும் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே இன்று (பிப்ரவரி 27) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்ட்ரலில் இருந்து இன்று காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 9.55, 11.25, மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இன்று காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து இன்று மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

