உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர்.

26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால் சிறியவராக இருந்தாலும், சாதிப்பதில் பெரியவராக இருக்கிறார். அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளா. 3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனையாளர். பாடி பில்டிங்கை தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்ட இந்த சாதனை மனிதர், தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டார்.

இதோபோல் குரோஷியாவைச் சேர்ந்த 56 வயது நபர் வித்தியாசமான உலக சாதனை படைத்துள்ளார். புத்மிர் சோபத் என்பவர், தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார். இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு தான் செய்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார்

ஜோ எல்லிஸ் என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோ, மின் விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இந்த சாதனை படைத்துள்ளார்.
- ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி..,

- மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த கைதி தப்பி ஓட்டம்..,

- குயின் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் நடைபெற்ற அழகிப் போட்டி..,

- கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் உதய தின கொடியேற்ற நிகழ்வு..,

- மதுரை வீரன் கோவில் கனி மாற்றுத் திருவிழா..,

- மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026-யின் தொடக்க விழா..,

- பாண்டியராஜபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..,

- ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

- அண்ணாமலை பாஜக கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை..,

- மின்கட்டமைப்பு மேம்பாட்டில் கடந்த தி.மு.க அரசு தோல்வி -அமைச்சர் செங்கோட்டையன்..,





