• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அத்தியூத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

Byadmin

Jul 28, 2021

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர் முருகன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் தியாகராஜன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ஜெயசீலன். கிளை செயலாளர் வேல், இளைஞரணி இணை செயலாளர் சரவணன். குண்டு சுப்பிரமணியன். பூபாலசமுத்திரம் கிளை செயலாளர் சுப்பையா, ஐடி விங் துணை செயலாளர் மேகலிங்கராஜா, ஐடி விங்க் ஊராட்சி செயலாளர் மார்கண்டேயன். ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன். அம்மா கிருஷ்ணன். இளைஞர் பாசறை நேருராஜா, ஐடி விங் ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், கரும்பனூர் கிளை செயலாளர் தங்கசாமி, மேலவை பிரதிநிதி பாஸ்கர், தமிழ்செல்வம்.கிளை செயலாளர் திருக்குமரன், கூட்டுறவு இயக்குநர் முத்துராஜா, ஒன்றிய பிரதிநிதி டெய்லர் ராஜா, கிளை செயலாளா லோகநாதன். ஆத்தியூத்து கிளை செயலாளர் லெட்சுமணன். ராம்நகர் கிளை செயலாளர் மாசானம். மேலவை பிரதிநிதி எஸ் மாசானம் உள்பட கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.