• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக இருதய தினம்

Byகுமார்

Sep 28, 2021

உலக இருதய தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் சந்திப்பில்: இதயவியல் துறையின் தலைவர் டாக்டர் என். கணேசன் பேசியது: ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் 3-5 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் நிகழும் அனைத்து இழப்புகளும் 30 சதவீத பங்கினைக் கொண்டு, உயிரிழப்பிற்கான முதன்மைக் காரணமாக இருதய நோய் இருக்கிறது. இருதய நோயாளிகள் சுமார் 40சதவீத நபர்கள் 45 ஆண்டுகளுக்கும் குறைவான வயதைச் சேர்ந்தவர்கள் என்பது வருத்தத்துக்குரியது. அக்கறை காட்ட வேண்டிய விஷயம் என்று அவர் வலியுறுத்தினார். திறம்பட செயலாற்ற கூடியவர்கள் வயதான போது 30 மற்றும் 40 வயதில் இருக்கும்போது, இருதய நோய்கள் அவர்களுக்கு ஏற்படுவது அல்லது அதற்கு காரணமாக அந்த நபர்களது குடும்பம் கடுமையான நிதிசார் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும் இருதயநோய் பிரச்சனைகளுக்கான இடர்களை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பேசுகையில், வராமல் முன் தடுப்பதே சிறந்த தீர்வாகும் என்று டாக்டர் கூறினார்.

மிகவும் தாமதமாக ஆவதற்கு முன்பே இளம் தலைமுறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருதய நோய் வருவதற்கான தங்களது இடங்களை உரிய சோதனைகள் மூலம் அவர்கள் கண்டறிவது அவசியம். அத்துடன் உரிய வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஒரு செயல் திட்டங்களையும் அவர்கள் உருவாக்குவதுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவற்றை அவர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருதய பிரச்சனைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்று டாக்டர் கணேசன் குறிப்பிட்டார்.


உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரழிவு, காற்று மாசு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு, சிறுநீரக நோய், உடற்பயிற்சியின்மை மற்றும் மது அருந்துதல் போன்றவை இருதயநோய் வருவதற்கான காரணிகளில் உள்ளடங்கும். கூடுதலாக, குடும்ப வரலாறு பின்புறம் பாலினம் மற்றும் வயது ஆகிய காரணங்களாலும் ஒரு நபருக்கு இந்த நோய் வரும் ஆபத்து இருக்கிறது.


மன அழுத்தம், துரித உணவு, போதிய உறக்கமின்மை போன்ற பரபரப்பான அதிவேக வாழ்க்கை காரணிகள் பெரிய காரணங்களாக உருவாகி வருகின்றன. இதற்கு மாறாக, நமது ஆரோக்கியம் நலவாழ்வு மற்றும் உற்பத்தித் திறனுக்கு நேரெதிரான விளைவே அது நமக்கு தருகிறது என்று டாக்டர் கணேசன் விளக்கமளித்தார்.


இந்நிகழ்ச்சியின் போது உரையாற்றிய, இருதய நுரையீரல் இரத்ததான அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவரும் முதுநிலை தலைவர் டாக்டர் ஆர்.எம். கிருஷ்ணன், இருதய நுரையீரல் இரத்ததான அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜன் மற்றும் இருதயம் சார்ந்த உணர்வு துறையில் முதுநிலை டாக்டர் ஜெயபாண்டியன், டாக்டர் சம்பத்குமார், டாக்டர் செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.