சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஹார்ட்புல்னஸ் நிறுவனம் மற்றும் PSY பொறியியல், கலை மற்றும் அறிவியல் மல்லூரி இணைந்து நடத்தும் மகளிருக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியானது வேலுநாச்சியார் மணி மண்டபத்தில் துவங்கி அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.