ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு துறையில் அதிகாரி பணி வழங்கப்படும் என்று முதல்-வர் பசவராஜ் பொம்மை
அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஏகலவ்யா விருது வழங்கும் விழா பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு ஏகலவ்யா விருது வழங்கினார்.
இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் கர்நாடக விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் பட்டப்படிப்பு படித்திருந்தால் அரசு துறைகளில் ஏ பிரிவில் அதிகாரி பணி ஒதுக்கப்படும். ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பி பிரிவு பணியும், பிற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு சி, டி பிரிவு பணியும் வழங்கப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் கொள்கை கர்நாடகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. கர்நாடகத்தில் 75 வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வைக்க தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நல்ல பயிற்சியாளர்கள் மூலம் உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் படிப்பை தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வெல்ல வீரர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு தேசியவாதத்தின் குறியீடு. இளம் விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து.
விளையாட்டு திறனை வைத்து நாடுகள் அடையாளம் காணப்படுகின்றன. அதனால் பிரதமர் மோடி விளையாட்டை முன்னிலைக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கேலோ இந்தியா, பிட் இந்தியா, ஜெடோ இந்தியா பெயர்களில் விளையாட்டு குறித்து இளைஞர்கள் இடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்களால் கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது. பாரா ஒலிம்பிக்கில் இந்தியா நல்ல திறனை வெளிப்படுத்தியது. இளைஞர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த இளைஞர் கொள்கை கொண்டு வரப்படும். போலீஸ் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]
- ஐஸ்கிரீம் கோன் போல் டீ, காபி கப்..,
ஆசிரியையின் அசத்தலான தயாரிப்பு..!ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் மற்றும் டீ, காபி பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் அது […] - காஷ்மீரில் கொட்டும் பனியில் கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவவீரர்கள்..!ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ […]
- பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் […] - சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […]