உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அணியான ஸ்பெயின், 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ அணியை சந்தித்தது. பந்து அதிக நேரம் ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும், மொராக்கோ அணியினர் அதிரடி தாக்குதல் ஆட்டம் மூலம் ஸ்பெயின் அணிக்கு அச்சுறுத்தல் அளித்தனர். 26-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்கோ அசென்சியோ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 33-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் மஸ்ராய் கோல் வலையை நோக்கி அடித்த வலுவான ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் சிமோன் தடுத்து நிறுத்தினார். இரு அணியினரும் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு அவ்வப்போது கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் கடைசி வரை தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு ‘பிரிகிக்‘ வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பில் டேனி ஒல்மோ அடித்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாஸ்சின் தடுத்து வெளியேற்றினார்.
வழக்கமான நேரத்தில் (90 நிமிடம்) ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தினாலும் கோல் வலைக்குள் பந்தை அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கபட்டது. மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினார். 3-வது வாய்ப்பில் பாத் பினோன் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். ஸ்பெயின் அணி தங்களது முதல் 3 வாய்ப்புகளிலும் கோல் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. அந்த அணியின் பாப்லோ சராபி பந்தை கோல் கம்பத்தில் அடித்து வீணடித்தார். கார்லோஸ் சோலெர், கேப்டன் செர்ஜியோ ஆகியோர் அடித்த பந்துகளை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து முதல்முறையாக காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]