மதுரையில் இருந்து போடி வரையிலான 90 கிலோ மீட்டர் ரயில் சேவை 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வந்தது.
மந்தமாக நடந்து வந்த இந்த பணி மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி ரூபாய் 450 கோடி செலவில் அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. போடி வரை சில அத்தியாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல கட்டங்களாக இப்பகுதியில் அதிவேக ரயில் ஓட்டம், அதிவேக ரயில் இன்ஜின் ஓட்டம் பரிசோதனை செய்து அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனாலும் ஆண்டிபட்டி வரைக்குமான முதல்கட்ட ரயில் சேவை தொடங்கப்படவில்லை.