விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வரும் அரசு, நாங்கள் தயார் செய்யும் கூடைகளைக் கொள்முதல் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா என கூடை பின்னும் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் கோவிந்தசாமி நகர் மேட்டுப்பட்டி சாலையில் சுமார் 40 வருட காலமாக கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இங்கே சுமார் 20 வகையான கூடைகள் குடிசை தொழில் போன்று வீட்டின் முன்பே தாங்களாகவே பின்னி வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் கூடை பின்ன பயன்படுத்தப்படும் மூங்கில் மரங்கள் கேரளாவில் இருந்து பல்வேறு ஏஜென்ட்கள் மூலமாக திண்டுக்கல்லில் உள்ள கூடை பின்னும் தொழிலாளிகளிடம் வந்து சேரும்.
இவ்வாறு வரவழைக்கப்படும் மூங்கில் மரங்களை சிறு துண்டுகளாக நறுக்கி கூடை பின்னுவதற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் அளவிற்கு பட்டை பட்டைகளாக சீவி, வலுவான கூடைகளை பின்னி வருகிறார்கள். மேலும் இவர்கள் பின்னும் கூடை வகைகளில் கோழி பஞ்சாரம், முளைப்பாரி கூடை, தட்டு வகைக் கூடை, அழகுச் சாதன பூக்கூடை, இடியாப்பம் தட்டு கூடை, மிச்சர் கூடை, கடலை மில்லில் பயன்படுத்தப்படும் கூடை, காய்கறிக்கூடை, அரிசி புடைக்கும் முரம் உள்ளிட்ட ஏராளமான விதவிதமான கூடைகளும் இடம் பெற்றுள்ளன.
தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் தயார் செய்து வியாபாரம் செய்வதால், கூடை பின்னும் தொழிலாளிகளின் வியாபாரம் மந்தமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கூடை பின்னும் தொழிலாளி ஸ்ரீரங்கன் கூறியதாவது, “40 வருடமாக கூடை பின்னும் தொழில் செய்து வருகிறேன். கூடை பின்ன மூலதனமாக விளங்கும் மூங்கில் கேரளாவில் இருந்து பல்வேறு ஏஜென்ட்கள் மூலம் வருவதால் விலை அதிகமாக உள்ளது. இதனால் தாங்கள் வியாபாரம் செய்யும் கூடையில் போதிய லாபம் இல்லை.
பொதுமக்கள் பல்வேறு நவீன வசதி கொண்ட கடைகளில் கொள்முதல் செய்யும்போது அவர்கள் கூறும் விலையை பேரம் பேசாமல் வாங்கி வருவார்கள். ஆனால் எங்களிடமோ சொன்ன விலையில் பாதியை குறைத்து கொடுங்கள் என்று பேரும் பேசுவது, வேதனைக்குரியதாக இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் விவசாயிகளுக்கு அளித்து வரும் அரசாங்கம், கூடை பின்னி வாழ்க்கை நடத்தும் எங்களுக்கும் மானியத்தில் மூங்கில் மரம் வழங்கவும், நாங்கள் தயார் செய்யும் கூடை வகைகளை கொள்முதல் எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த உதவிட வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]