• Thu. Apr 18th, 2024

மதுரையில் மின் வயர் வாங்கி தரும்படி நிர்பந்திப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ByKalamegam Viswanathan

Apr 25, 2023

மதுரையில் இரண்டு நாட்களாக சூரைக்காற்றுடன் பெய்து வரும் கோடை மழையால் பழுதாகிப்போன மின் கம்பங்கள்; பொது மக்களை மின் வயர் வாங்கி தரும்படி நிர்பந்திப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஓவியர் நகர் குடியிருப்பு சுமார் 70-ற்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று பெய்த கோடை மழையில் காரணமாக மின் கம்பங்கள் மின் வயர்கள் கடுமையாக சேதம் முற்றத்தை தொடர்ந்து பொதுமக்கள் மின்வாரியத்தில் மின் இணைப்பு பழுது பார்த்து தரும்படி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மின்வாரிய அலுவலர்கள் புதிய மின் வயர்களை குடியிருப்பினர் ஒன்றிணைந்து வசூல் செய்து வாரிய அலுவலகம் கொடுத்தால் புதிய மின் வயர்கள் கொண்டு மின் இணைப்பு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து சூரைக்காற்றுடன் வீசிய மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் இரண்டு நாட்களாகியும் மின்வாரியத்தின் அலட்சியமான போக்கு பொதுமக்களிடையே வேதனை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *