தென்னாப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது. செஞ்சூரியனில் வெற்றியை ருசித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில், இன்று தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெரஸ் ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 3) இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இதுவும் முழுமையான வேகப்பந்து வீச்சுக்கு கட்டுப்படகூடிய ஆடுகளம் தான். இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று விளையாடி வரும் இந்தியாவுக்கு ராசியான மைதானம் ஜோகன்னஸ்பர்க். இங்கு இந்திய அணி ஒருபோதும் தோற்றது கிடையாது. இந்த மைதானத்தில் தோல்வியே காணாத ஒரே அணி இந்தியாதான். இங்கு இதுவரை ஐந்து டெஸ்டுகளில் ஆடியுள்ள இந்தியா அதில் இரண்டில் வெற்றியும், மூன்றில் டிராவும் கண்டுள்ளது.முதலாவது வெற்றி 2006ஆம் ஆண்டு கிடைத்தது.
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதுதான் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாகவும் அமைந்தது.
இரண்டாவது வெற்றி 2018ஆம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் கிடைத்தது. இந்த டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா 177 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், புஜாரா, விராட் கோலி ஆகியோர் இங்கு சதம் அடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் 42 டெஸ்டுகளில் விளையாடி 18இல் வெற்றியும், 13இல் தோல்வியும், 11இல் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசியாக நடந்த 20 டெஸ்டுகளில் 19இல் முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த டெஸ்டில் இந்தியாவெற்றிபெற்றால் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைப்பதாகும் மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் (ஒன்பதாவது வெற்றி) என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார்.
மேலும், விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானது. இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். இந்த மைதானத்தில் விராட் கோலி 310 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜான் ரெய்டு 316 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி இன்னும் 7 ரன்கள் அடித்தால், ஜோகன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ரிக்கி பாண்டிங் 263 ரன்களும், ராகுல் டிராவிட் 262 ரன்களும், டேமின்மார்ட்டின் 255 ரன்களும் அடித்துள்ளார்.
இந்த நிலையில், போட்டியில் களம் இறங்க மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாக விராட் கோலி கூறியுள்ளார். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் இன்று தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]