டிசம்பர் 24 அன்றுவெளியான ரைட்டர் திரைப்படம், மக்களுக்கான கருத்தை சொல்வதோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்க்ளின் இயக்கத்தில் சமுத்திரகனி, சுப்ரமணியசிவா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இது.
இந்நிலையில், ‘ரைட்டர்’ படம் சிறப்பாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

தமிழ்சினிமாவில் மூத்த நடிகரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பிறகு பொது விசயங்கள் குறித்து கருத்து கூறுவதில்லை.அதே நேரம் வழக்கம்போல தான் ரசித்த படங்களை – அப்படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி வருகிறார்.இந்நிலையில், ரைட்டர் படத்தை ரஜினி பாராட்டியதாக, அப்படக்குழு தெரிவித்தது.
பட இயக்குநர் ப்ராங்க்ளின் கூறியதாவது, “ரைட்டர் படத்தைப் பார்த்த ரஜினி எனக்கும், படத் தயாரிப்பாளர் ரஞ்சித்துக்கும், நடிகர்கள் சமுத்திரகனி, சுப்ரமணியசிவா உள்ளிட்டோருக்கும் தனித்தனியாக அலைபேசி பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பல ஊர்களில் ரைட்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. ஆனால், படத்தை ரஜினி எங்கே பார்த்தார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது
இது குறித்து விசாரிக்கையில் நம்பத்தகுந்த வட்டாரங்கள், “கொரோனா பரவல் என செய்திகள் வெளியானதில் இருந்தே, படப்பிடிப்பு தவிர வேறு எங்கும் நடிகர் ரஜினி கலந்துகொள்வதில்லை. அவரது சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினியின் பங்களாவில், சிறு திரையரங்கம் உள்ளது. கியூப் மூலம் திரையரங்கங்களில் படம் வெளியிட்படுவது போல, ரஜினி வீட்டு திரையரங்கிலும் திரையிடப்பட்டது.
அங்கு ரஜினி, அவரது மனைவி மற்றும் இளையமகள் சௌந்தர்யா ஆகியோர் படத்தை பார்த்தனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, அவரது கணவரும் நடிகருமான தனுஷ் ஆகியோர் வேறு பணியில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.
படம் பார்த்து முடித்தவுடனேயே, ரைட்டர் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் சிலரை அலைபேசியில் அழைத்து ரஜினி பாராட்டினார்” என்று தெரிவித்தனர்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]