விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில்., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 232 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் மானியத் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் ரூ.2.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினார்கள்.