ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறதகுதியான கல்லூரி மாணவிகள் யார் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தகுதியான மாணவிகள் யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த திட்டத்தில் பயன்பெற மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் ஆர்.டி.இ.-ன் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தபின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளும் பயன்பெறலாம்.
அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, பழங்குடியினர் நலன், கள்ளர் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளிகள் போன்றவற்றில் படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம். மாணவிகள் 8 அல்லது 10 அல்லது பிளஸ்-2 வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
2022-23-ம் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் முதலாம் ஆண்டில் இருந்து 2-ம் ஆண்டுக்கும், 2-ம் ஆண்டிலிருந்து 3-ம் ஆண்டுக்கும் செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவிகளும், தொழிற்கல்வியில் 3-ம் ஆண்டில் இருந்து 4-ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளும், மருத்துவக்கல்வியை பொறுத்தமட்டில், 4-ம் ஆண்டில் இருந்து 5-ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். 2021-22-ம் ஆண்டில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனென்றால், அவர்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் இளநிலை படிப்பை நிறைவு செய்துவிடுவார்கள். இளநிலை படிப்பு படிக்கும் மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தின் பயன்பெறமுடியும். முதுநிலை மாணவிகளுக்கு கிடையாது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். பயன்பெற தகுதியான மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடுரோட்டில் கதறி அழுத போலீஸ்..வைரல்வீடியோஉ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா […]
- ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழாமதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.75வது சுதந்திர தின […]
- மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுமதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் […]
- முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க […]
- சமையல் குறிப்புஈசியான சமையல் டிப்ஸ் ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக […]
- அழகு குறிப்புபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு […]
- குறள் 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு […]
- பொதுஅறிவு வினா விடைதூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?விடை: 1953 பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜாராம் மோகன்ராய் […]
- பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்துபூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து […]
- தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்திதேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி […]
- பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் […]
- ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளிதிருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் […]
- வாட்ஸ்ஆப்-ல் இணைய இருக்கும் புது அம்சங்கள்..!!வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் […]
- பாஜவின் கணக்கு..ஓபிஎஸ்ஸிடம் செல்கிறதா அதிமுக…ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக உள்ள அதிமுகவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக […]