வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம், இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா வலியுறுத்தல்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
12 மணி நேர தொழிலாளர் மசோதா குறித்த கேள்விக்கு:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக 12 மணி நேர வேலை சட்டத்தை மனமுவந்து வரவேற்கிறோம். தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக 12 மணி நேரம் வேலை செய்கிற போது எங்களின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும், பல நாடுகளிலிருந்து வேலையை தொடங்கி தருவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது, அதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் பிரச்சனை போராட்டம் இல்லாத ஒரு நிலை இருந்தால் தான் மற்ற நாடுகளில் இருந்து வணிகம் செய்வதற்கு, தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக வருவார்கள். இது ஆக்கப்பூர்வமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, பல்வேறு அரசியல் கட்சிகள் சில கட்டத்தில் எதிர்ப்புகளை பதிவு செய்து தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மனதில் இது சரியான தீர்மானம் என்பது புரிந்திருக்கும். நாளை அவர்கள் அமைச்சரை சந்திக்க இருக்கிறார்கள் நல்ல தீர்மானம் எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
தொழிலாளர் சங்க எதிர்ப்பு குறித்த கேள்விக்கு:
12 மணி நேரம் வேலை என்பது இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மூன்று நாள் விடுப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். இது பெரிய வரப்பிரசாதம். காலை உணவு, மதிய உணவு இடைவேளை என பல்வேறு நேரங்கள் ஒதுக்கப்படுவதால் வேலையில் சுணக்கம் ஏற்படுகிறது. இது போன்று ஊக்கப்படுத்துகிற போது அனைத்து துறைகளிலும் சுணக்கம் இல்லாத வேலை நடக்கக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் 24 மணி நேர சேவை கோரிக்கை குறித்த கேள்விக்கு:
மதுரை விமான நிலையம் என்பது ஓரளவுக்கு விரிவுபடுத்தி இருக்கிறார்கள், 24 மணி நேர சேவையை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். அருகில் தூத்துக்குடி துறைமுகம் இருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. அனைத்து தென்மாவட்டங்களும் வளர்வதற்கு இது ஊக்கமாக இருக்கும். வருகிற மே 5 வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. அப்போது இதை தீர்மானமாக கொண்டு வர இருக்கிறோம்.
ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இது எப்படி பொருந்தும் என்ற கேள்விக்கு:
சுழற்சிமுறையில் அடிப்படையில் வேலை செய்தாலும் கூட 24 மணி நேரம்தான். வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம் இடையில் உணவு மற்றும் இடைவேளைகள் உள்ளது. இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]