• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மூன்றாவது அலை வந்தாலும் அதனை தடுக்க தயாராக உள்ளோம்.., அமைச்சர் மா.சுப்பிரமணி பேட்டி!..

தடுப்பூசி செல்லுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதால் மத்திய அரசு கேட்கின்ற தடுப்பூசியை தருகின்றனர் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்*

சிவகங்கை மாவட்டம் திருப்பூவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்மை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு தகவல் திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தடுப்பூசி முகாமமை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணி

போன மாதம் மற்றும் ஒரு கோடியே 42 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது மத்திய அரசு நிர்ணயித்த ஒரு கோடியே 4 லட்சம் அதைவிட அதிகமாக 30லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது .
இந்த மாதம் ஒரு கோடியே 23 லட்சம் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது இதையும் சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது

மீண்டும் கடந்த மாதத்தை போல ஒன்றி அரசு தடுப்பூசிகள் அதிகமாக தரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்
மூன்றாவது அலை வரக் கூடாது அது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 62% முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது இது ஒரு பெரிய பாதுகாப்பான சூழல் W.H.O மற்றும் I.C.M.R சொல்வதுபோல 70% மேல் தடுப்பூசி போட்டு விட்டாள் எந்த அலை வந்தாலும் அதிலிருந்து மக்களை காத்து விடலாம். பெரிய ஒரு உயிர் சேதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது .

அந்த வகையில் இந்த 70%தடுப்பூசியை அக்டோபர் இறுதிக்குள் எட்டிவிடுவும் என்ற நம்பிக்கை இருக்கிறது‌.

நேற்று வரை 62 % வரை முதல் தடுப்பூசி 20%
வரை இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது இந்த மாதம் இறதிக்குள் உறுதியாக70% இலக்கை எட்டி விடும் என்று நம்பிக்கை இருக்கிறது