தனது நடைபயணத்தில் செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தேச ஒற்றுமையை விலுயுறுத்தி “பாரத் ஜோடா யாத்ரா” என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ள அவர் தற்போது கேரளாவில் இருக்கிறார். ஒருநாளைக்கு 25 கிமீ தூரம் நடைபயணம் செல்லும் அவர் கேரளாவில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொண்டர்களுடன் தரையில் படுத்துறங்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. இதனை பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.