• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2023

மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டுகிராம மக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் பாதிப்பு.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சோழவந்தான் அணைப்பட்டி சாலையில்2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், தற்போது இங்கு உள்ள கோயில்களில் முளைப்பாரி திருவிழா நடந்து வருவதால் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு உறவினர்கள் வந்திருக்கின்றனர். இந்த நிலையில் குடிநீர் சரிவர வராததால் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக, இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தது சம்பவம் அறிந்து சோழவந்தான் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் காவல்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.