திருத்தமிழர் போராட்ட தியாகி மும்,குமரி மாவட்டத்தில் மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான கொடிக்கால் செல்லப்பா, வயோதிகம் காரணமாக பொது நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காத சூழலில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கொடிக்கால் செல்லப்பாவை,அவரது இல்லம் சென்று,பொன்னாடை அணிவித்து நலம் விசாரித்துடன். இன்று வாழும் குமரியின் மூத்த அரசியல்வாதியும், சமுக நல சேவகரான முதியவர் கொடிக்கால் செல்லப்பா விடம் ஆசிபெற்றார்.
கடந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்தை ஆதரித்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசியவர்..,
இந்த வரிசையில் கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டமன்றங்களின் முன்னாள் உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான சுரேஷ் ராஜனை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து தனக்கான ஆதரவை கேட்டார் விஜய் வசந்த் . இந்த நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயமும் பங்கேற்றார்.