• Thu. May 2nd, 2024

விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு .

ByTBR .

Mar 25, 2024

அதிமுக , தேமுதிக தொண்டர்கள் உயிரைப் பணயம் வைத்து விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக கட்சியின் வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஜெயசீலனிடம்தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன்,கழக அமைப்பு செயலரும். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே டிராஜேந்திர பாலாஜி உடன் இருந்தார் .வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது.

அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் ,எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகளோடு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம்.. கேப்டன் விஜயகாந்தின் ஆசியோடு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கொட்டு வெற்றி பெற்று டில்லியில் எங்களது முரசு கொட்டும் .அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், சகோதரி பிரேமலதா ஆசியுடன்அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் வியாபார பெருமக்கள் விருதுநகர் பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் ஆகிய அனைவரும் கேப்டன் விஜயகாந்தின் புதல்வன் விஜயபிரபாகரை வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே இருந்த திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டுக்கு என்று எதுவுமே செய்யவில்லை. விருதுநகர் தொகுதியில் பட்டாசு பிரச்சனை, வியாபாரிகள், விவசாயிகள், நெசவாளர் பிரச்சனைகள் ஆகியவை அனைத்தையும் தீர்க்க படித்த இளைஞர்,,மனிதநேயமிக்க பண்பாளர் கேப்டன் விஜயகாந்தின் புதல்வர்விஜய பிரபாகன்இந்தத் தேர்தலில் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் தேமுதிக தொண்டர்கள் உயிரை பணயம் வைத்து தேர்தலில் பணியாற்ற வேண்டும். விஜய பிரபாகர் வெற்றி பெற்றால் நல்ல ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக விருதுநகர் தொகுதிக்கு நல்ல திட்டங்கள் அனைத்தையும் செய்து கொடுப்பார். இவ்வாறு பேசினார்.

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகன் பேசியதாவது

அன்பு நிறைந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளே, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களே, சகோதர, சகோதரிகளே, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் மற்றும் உங்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆசியோடு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று உங்களில் ஒருவனாக நான் இருப்பேன். விருதுநகரின் குரலை டில்லியில் ஒலிக்கச் செய்வேன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அண்ணி சொன்ன மாதிரி இந்த கூட்டணி மிகவும் ராசியான கூட்டணி. இந்த தேர்தலிலும் இந்த வெற்றி கூட்டணி தொடரும். கேட்பது என் உரிமை, கொடுப்பது உங்கள் கடமை. உங்கள் வீட்டுப் பிள்ளை கேப்டன் விஜயகாந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆசியுடன் உங்களுக்காக, எனக்காக, நமக்காக என்னை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் இவ்வாறு பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *