யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது
இந்த விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய படத்தின் நாயகனான விஜய் சேதுபதி, “யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். அவருடைய இசையில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி பேசும்போது, “தற்போது நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்து காத்திருக்கிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும்விதமாக இப்படம், இளையராஜா பிறந்த ஊரான தேனி, பண்ணைப்புரத்தில் படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,”இந்தப் படம் வெளியாவதில் பல சிக்கல்களும், சந்தேகங்களும் இருந்தன. ஆர்.கே.சுரேஷ் படத்தைப் பார்த்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்ததாக கூறியதாக இயக்குநர் சீனு ராமசாமி என்னிடம் தெரிவித்தார். குழப்பமான ஒரு சூழ்நிலையில் இருந்தபோது, இது ஒரு நேர்மறையான உணர்வைக் கொடுத்தது.
நானும் சீனு ராமசாமியும் ஒன்றாக பல முறை பணியாற்றியுள்ளோம். அவர் ஒரு அருமையான இயக்குநர். நான் விஜய் சேதுபதியை அணுகியபோது அவர் டேட் இல்லை என்று கூறினார். நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாலுமகேந்திராவுக்குப் பிறகு மனித உணர்வுகளை அப்படியே படம் பிடிக்கும் சம கால இயக்குநர்களில் சீனு ராமசாமி முக்கியமானவர். எங்கள் இருவரின் நட்புதான் ‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.
மக்கள் மனதில் ரஜினிகாந்த் மட்டுமே அடைந்துள்ள இடத்தை விஜய் சேதுபதி கூடிய விரைவில் பிடிப்பார். சீனு ராமசாமி எப்போதும் விஜய் சேதுபதியிடம் இருந்து சிறந்ததையே பெறுவார். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

- சிவகாசி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்புவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் […]
- பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவுதமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக […]
- சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம்சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி […]
- உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலாஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா […]
- தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்துபுளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் […]
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […]