• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விஜய் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டே இருக்கிறார் -குஷ்பு..,

ByPrabhu Sekar

Sep 23, 2025

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்,

ஜிஎஸ்டி மக்களுக்காக தான் கம்மி பண்ணி இருக்காங்க இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு என்று 28% ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீதம் 12 சதவீதம் என குறைத்துள்ளனர் ஐந்து சதவீதம் இருக்கக்கூடிய ஜி எஸ் டி யை முற்றிலுமாக ரத்து செய்துள்ளனர்,

குறிப்பாக 330 மருந்துகளுக்கு ஜீரோ சதவீதம் ஜிஎஸ்டி இருக்கின்றது
நம்முடைய தமிழக மக்கள் என்றும் சௌகரியமாக வாழ்வதற்கு அவர்களுடைய சேமிப்பை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும் அனைவரும் சேர்ந்து நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி மத்திய அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்

தம்பி விஜய் புதுசா வந்திருக்கிறார் முழுசா தெரிஞ்சுகிட்டு பேசினால் நன்றாக இருக்கும்,

ஒரு பாலிசி வரும் பொழுது தமிழ் மீனவர்களுக்கும் வேறு மாநிலத்தில் வாழும் மீனவர்களுக்கும் வேறு வேறு பாலிசி கிடையாது இந்தியா முழுவதும் ஒரே சிங்கள் பாலிசி தான் இருக்கின்றது எந்த பாலிசியாக இருந்தாலும் மத்திய அரசு ஒரு பாலிசி கொண்டு வந்தால் அது ஸ்டேட் வாய்ஸ் பாலிசி கிடையாது,

இப்பொழுது தமிழக மீனவர்களுக்கு வேறு பாலிசி இருந்தால் விஜய் அவர்கள் கூறுவது குற்றம் சொல்வதை நியாயமாக இருக்கலாம் ஆனால் அவர் கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்,

விஜய் அவர்கள் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டே இருக்கிறார் அவர் அரசியலுக்கு வரட்டும் அவர் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வரும் என்பதை அப்புறம் பார்ப்போம்

இது என்ன விஜய் சார் கொடுத்த இன்டர்வியூவா வரட்டும் அப்புறம் பார்ப்போம் எனக் கூறிவிட்டு சென்றார்.