தங்களின் படங்களுக்கு நல்லதொரு பொருத்தமான தலைப்புக்கான பெயரை வைப்பதற்கு யோசிக்க முடியாத வாழைப்பழ சோம்பேறிகள், சிந்திக்கும் திறன் அற்றவர்கள்
புகழ் பெற்ற பழைய படங்களின் பெயர்களை விலைக்கு வாங்கி படங்களை தயாரிக்கும்போக்கு தமிழ்த் திரையுலகத்தில் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதனால், அந்தப் பழைய படங்களின் தகவல்கள், புகைப்படங்கள்கூட இணையத்தில் கிடைக்காத சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது.இதனாலேயே, “பழைய படங்களின் பெயர்களில் புதிய படங்களை உருவாக்க வேண்டாம். பழைய படங்களின் தலைப்புகளையும் யாருக்கும் கொடுக்காதீர்கள்” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இதையெல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் பழைய படங்களின் பெயர்களில், புதிய படங்களைத் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இப்போது ‘மன்மத லீலை’ என்ற பெயரில் தான் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது இவர் இயக்கும் 10-வது படமாகும்.இந்த ‘மன்மத லீலை’ திரைப்படம் 1976-ம் ஆண்டு வெளியானது. கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படமாகும்.
இன்றுவரையிலும் இயக்குநர் கே.பி.யின் சிறந்த படங்களில் ஒன்றாகவும், கமல்ஹாசனுக்கு நடிப்புத் திறமைக்கு ஒரு சான்றாகவும் இத்திரைப்படம் இருந்து வருகிறது.இப்போது இந்தப் படத்தின் பெயரிலேயே புதிய படத்தை வெங்கட் பிரபு அறிவித்திருப்பது தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
மேலும் இப்போதுவரையிலும் இந்தத் தலைப்பினைப் பயன்படுத்துவதற்கு கலாகேந்திரா தயாரிப்பு நிறுவனத்தின் குடும்பத்தாரிடம் அனுமதியே வாங்கவில்லையாம். அனுமதி வாங்காமலேயே எப்படி டைட்டிலை அறிவிக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் குடும்பத்தினர் தற்போது வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இனிமேல் கேட்டாலும் இந்தக் கிளாஸிக் படத்தின் தலைப்பைத் தருவதாக இல்லையாம்..!
ஆக.. படத்தின் அறிவிப்பிலேயே பிரச்சினை துவங்கிவிட்டது..!
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]