• Tue. Apr 30th, 2024

வாடிப்பட்டி தாலுகா இ சேவை மையத்தில்.., போதிய இருக்கைகள் அமைத்து தர கோரிக்கை..!

ByKalamegam Viswanathan

Oct 20, 2023

வாடிப்பட்டி தாலுகா இ சேவை மையத்தில் பொதுமக்கள் அமருவதற்கான போதிய இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என சட்டப்;பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் இயங்கும் இ-சேவை மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவில்இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமரும் நிலை உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கள் வந்து செல்லும் இந்த இ-சேவை மையத்திற்கு மக்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கைகள் கிடையாது. வாடிப்பட்டி வட்டாட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *